Skip to main content

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்



இன்னமும் தட்டச்சு செய்யப்படாத 
விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்
செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது.

வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு 
பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண் 
இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்

அது என்னைப் பற்றியது

சாயமற்ற தன் உதடுவழி 
அவள் தன் பாடலை இப்படித் தொடங்கினாள்

"...அவனொரு வெள்ளைக் காகிதம்
நானோ மைபூசப்பட்ட ஒளி.."

உஷ்ணமான மெல்லிய தோலிலிருந்து
காதல்  ஒரு தூதுவன் போல இறங்கி வரும் என்று 
ஏமாற்றப்பட்டவளின் எளிய மனசாட்சியென
நான் திரும்பவும் இன்னொருமுறை சுவரில் மோதுகிறது.

பின் முத்தம் கிடைக்கிறது 

அந்த இரவு என்னைப் பெண் என்று பெரிய எழுத்துக்களால் எழுதி 
உரத்து வாசித்தவண்ணம் கழிந்து போனது


Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

#joy_is_mingling_HU

   we sowed the remained  words  as flaky mountains then  saliva of words  laid on a blank paper  flowed into brook mountains were wet as pure poems never decayed, as a green portrayed on leaves, as a warmth of inner-saffron  me jabbers the journey within   #joy_is_mingling_HU