Skip to main content

Posts

Showing posts from May, 2015

யசோதரா!!!

கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது. (அது எவ்வாறெனில்...) கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது. (அதனால்) பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி பட்டு விரைக்கிறது ஞானத்தின் குறி. (அதிலிருந்து) நம்மைப் பிரித்து வைத்திருக்கிற மூன்றாவது வெசக் நிலவை நீ சபிக்கிறாய், தைக்கப்படாத துணியால் போர்த்தப்பட்ட என் துறவைச் சபிக்கிறாய், ஆடைகளெதுவுமற்ற முதல்வார்த்தையின் தூய நிர்வாணத்தைச் சபிக்கிறாய், ஒரு வண்டு போல இரைந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதன் நீண்ட குறியைச் சபிக்கிறாய், விலக்கப்பட்ட கனியையுண்டதும், தூக்கியெறியப்பட்டதுமான இரண்டு சொற்களும் பிறகு பூமியின் மீது பிணைந்தபடி கிடந்ததைச் சபிக்கிறாய், உன்னை நான் அணைத்தபடியிருந்த ஆற்றோரம் ஒரு குப்பி விளக்குச் சுடருக்குள் தொலைந்து போன புத்தபிரானின் விரகத் துளிகளைச் சபிக்கிறாய்,  (இத்தனைக்கும்) யசோதராவாகிய நின் விழியோரம் தேன் போல கசிந்துறைந்திருப்பது என்னுடைய பரிநிர்வாணத்தின் ஒளி. யசோதரா! நானென்பது உறையும் கழிவு. நீயென்பது இட