Skip to main content

Posts

Showing posts from 2017

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்டியிருக்கும் கால்மயிர்களுக்குள்   திவலை திவலையென அப்பியிருக்கும்   ஒவ்வொரு உ

#joy_is_mingling_HU

   we sowed the remained  words  as flaky mountains then  saliva of words  laid on a blank paper  flowed into brook mountains were wet as pure poems never decayed, as a green portrayed on leaves, as a warmth of inner-saffron  me jabbers the journey within   #joy_is_mingling_HU

Story of a Gloomy Dusk

© Fatheek Aboobucker The claypot filled of me as words unadorned, Paints the fragrance of this very dusk  on the inner wall An alleyway furcated of unknown Enlarged as adjoin-able in me the self, Writes the note of this very dusk  "Path is the destiny" Then  through the scars of decayed window  Bursts as light The great word  Imperishably coloured of thee 

இருண்ட அந்தியொன்றின் கதை

© Fatheek Aboobucker அலங்கரிக்கப்படா வெறுஞ்சொற்களென நான் நிரம்பியிருக்கும் மட்பாத்திரம் தன் உட்சுவருக்குள் இந்தக் கரிய அந்தியின் வாசனையைப் பூசி வைக்கிறது எதிலிருந்தோ பிரிந்த ஒரு குறுந்தெரு என்னில் வந்து இணையுமாறு பெரும் பாதையென அகன்று விரிகிற நான் 'பயணமே தன் போய்ச்சேருமிடம்' என அந்த அந்திக்கான வாசனைக் குறிப்பை எழுதி முடிக்கிறது. அப்போது  சிதைவுற்ற சாளரங்களின் தழும்புகளுக்குள்  ஒளியெனப் பீறிடுகிறது  நின் அழியா நிறங்கொண்ட பெருஞ் சொல்

Nightfall Song

©Fatheek Aboobucker   Who to extract from rays of this night?  You?  or  me? Who will write and take note The love-melody of   nightfall? What is the colour of love  In baby lamb words  prancing to escape from the poetry? what an ocean turns into the grieved river diverged off the life? Me; The light derived from the question,  Began its song of the late-night this way

Poem of a Baby Sparrow

frosty dawn wrapped in clouds completes sketching a sparrow on the nape of memory lusted on the deciduous leaves in yellow, it flapped renouncing the colours baby feathers falling around withered filled with an odor of an autumn dream black and white with a shortened hair whispered to ear "a rhythm of played lyre here to be spread all over thee" and widespread wings spontaneously names itself a poem of baby sparrow this time in lack of wandering into the poem, rests in the last line as last word The Me

Snow, Word or a Penance

2014 ©Fatheek Aboobucker Poems of a very solitary adhere like a leech on the Crease of my inner wall painted with blurred darkness in red Entrusting me for writing snow has started falling with its thousand poems, the night lays their eggs of secret words therein ME Scattered as; A cup frozen with tea stains, books read few pages or half, an innocent ballad with the feather that crow dropped, and a heap of dirty clothes, filled with the words of snow. The me In rapture, I play the beloved loudly as perversion of writing down then the latter repentance smeared the fragrance of the gloom all over my body writing is the pleasure of relieving,  music too I must sit yajna for pleading the boon of non-writing are your grays deeded for sitting on my lap with a shortened hair? Have your bareness and bosoms distract penance vanished from you yet yasodhara? * Yasodharā was a wife of Siddhārtha Gautama, later known as Gautama Buddha

மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும்   இருளைப் புகையச் செய்து   காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன் . படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது . கழற்றியெடுக்கப்பட்ட மற்றொன்றின் முகம்   இனி அணிவிக்கப்படத் தேவையில்லாதது தானென காலக்கோட்டின் மேல் தன் குறிப்பை எழுதிவைத்துவிட்டு மறைகிறது . வலிந்து அணிவிக்கப்பட்ட முகங்களுக்குள்ளிருந்து வீசுவதும்   அதே உஷ்ணமான ஒளிதானென்ற பாடலுடன் எனக்குள்ளிருந்து வெளியேறிய தெருப்பாடகன்   தன் தோற்கருவியைத் தட்டியபடி நடக்கிறான் பசியே அவனின் இசையாயிருக்கிறது அவனின் நீண்ட அங்கியின் மேல்   புழுதிக் கறையெனவும் பசியே படிந்திருக்கிறது இனிப் பசியினதும் புழுதி யின் நிறமே என உச்சஸ்தாயியில் அந்தப் பாடல் முன கியபடி நீள்கிறது அதே முன்னிரவில் பழைய புகைப்படங்களின் இருளுக்குள்ளிருந்து   ஒரு கீற்றெனத் தோன்றி மறைகிறது   என

பசியெனப்படும் பெருஞ்சொல்

01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட  பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி   இந்த நள்ளிரவு   தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது .  நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம் என   தனக்கெனத் தெரிந்தெடுக்கவென பசியின் பரவசம்   எதையுமே   விட்டு சென்றிருக்கவில்லையென ஏங்கி   தன் மேனி முழுக்க சாம்பல் நிறத்தைத் தீட்டிக் கொண்டது இரவு 02. பசியெனப்படும் பெருஞ்சொல்லை   அதே நிறங்களால் மீளவும் தன் மீது எழுதத் துவங்குகிறது நான் அப்போது   புத்தக அடுக்கினுள் புழுதி படிந்திருந்த குட்டிப் புத்தரின் மேல்   பாதி நிலவின் ஒளியெனப் படர்கிறது பசி பழம்புத்தக மடிப்புகளுக்குள் பசி ஒரு   பழுத்த மஞ்சள் நிறத்தின் வாசமென வீசுகிறது கடந்து செல்ல முடியாத கவிதைக்குள்ளோ   பசி தன்னையோர் மறுகாலால் உணரப்பட்ட   இன்னொரு நதியின் கதகதப்பெனக் குறித்து வைக்கிறது பசியெனப்படும் பெருஞ்சொல் தனக்கு இனி ஒ

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது ஆங்காங்கே உதிர்ந்து விழும் பிஞ்சு இறகுகள் முழுக்க கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை. குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன் காதோரம் "மீட்டப்பட்ட யாழின் சந்தம் உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்" என்றபடி கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது. கவிதைக்குள் நுழையவே முடியாது போன இந்தத் தடவை கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து ஓய்வெடுக்கிறது நான்.

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும் தட்டச்சு செய்யப்படாத   விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது . வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு   பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்   இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள் அது என்னைப் பற்றியது சாயமற்ற தன் உதடுவழி   அவள் தன் பாடலை இப்படித் தொடங்கினாள் " ... அவனொரு வெள்ளைக் காகிதம் நானோ மைபூசப்பட்ட ஒளி .." உஷ்ணமான மெல்லிய தோலிலிருந்து காதல்   ஒரு தூதுவன் போல இறங்கி வரும் என்று   ஏமாற்றப்பட்டவளின் எளிய மனசாட்சியென நான்  திரும்பவும்  இன்னொருமுறை சுவரில் மோதுகிறது . பின் முத்தம் கிடைக்கிறது   அந்த இரவு என்னைப் பெண் என்று பெரிய எழுத்துக்களால் எழுதி   உரத்து வாசித்தவண்ணம் கழிந்து போனது