Skip to main content

Posts

Showing posts from January, 2017

பனி, சொல் அல்லது தவம்

மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற  அறையின் சுவர் மடிப்புக்குள்  யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன எழுதிவிட நானிருப்பதாக நம்பி   ஆயிரங்கவிதைகளுடன்   விழத்தொடங்கியிருக்கிறது பனி , இரவோ அதற்குள் போய்   தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது . காவிகள் உறைந்த தேனீர்க் கோப்பை ,  பாதியளவும் சில பக்கங்களுமாக வாசிக்கப்பட்ட   ஆறேழு புத்தகங்கள் , உதிர்ந்த காகத்தின் இறகு கொண்ட இன்னொரு அப்பாவி நெடுங்கவிதை , கழற்றிக் குவித்த அழுக்காடைகளென   துண்டு துண்டெனச் சிதறிக்கிடக்கிற நான் முழுக்க பனியின் சொற்கள் . பரவசத்தில்   எழுதித் தீர்த்துவிடுதலின் வக்கிரமும்   பின்னான கழிவிரக்கமுமாக அலைக்கழிக்கிற   இருளின் வாசனையை நான்   மேனி முழுதும் பூசிக் கொண்டு   காதலியை உரக்க இசைக்கிறேன் . எழுத்தெனப்படுவது விட்டு வெளியேறுதலின் இன்பம் ; இசையும்தான் எழுதிவிடாதிருக்கும் வரம் வேண்டி   இனி யாகம் இருக்க வேண்டும் குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட கூந்தலுடன் மடிமீது வந்தம