Skip to main content

Posts

Showing posts from May, 2018

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின் மடிப்புகளுக்குள்   வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன ? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன ? வேரெனப் படர்ந்திருக்கும் இந்தப் பேரழகி இரவின்   சுருள்முடிக் கற்றைகளில் கிறங்கி   சொற்களைத் தவறவிடும் ஏதிலிக்கு கவிதையன்றி போக்கிடமேது ? கேள்விகள் செய்தே தீர்ந்து போன   சொற்களிருந்த இடைவெளிக்குள்ளிருந்து   படபடக்கும் நின் காதல் வெறுங் கவிதையின் மீது   கடல் நீல நிறமெனப்   படிந்து விடுகிறது .  கவிதையே என் திரை , கிரீடமும் அதுவே   என வழக்கம் போல தன் பிரத்தியேக வாத்தியம் கொண்டு இன்னொரு நள்ளிரவின் மீது   பாடலை இசைக்கத் தொடங்குகிறது நான்